:
Breaking News

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் இயங்காது

top-news

வருகிற 31ஆம் தேதி வங்கிகளில் வழக்கமான பரிவர்த்தனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், "இந்த நிதியாண்டு 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் செயல்படவுள்ளன. அன்றைய தினம் வழக்கமான பரிவர்த்தனைகள் நடைபெறாது" என்றனர்.

இந்த நிதியாண்டு முடிவடைய உள்ளதால் வரவு செலவு கணக்குகளை சரியாக கணக்கிட்டு, முறையாக வரிகளை அரசாங்கத்திற்கு செலுத்தி அதற்கான கணக்கும் முறையாக பராமரிக்க வேண்டுமென வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *